12 ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு





அட்மின் மீடியா

0

கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட்ட நிலையில்  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது மாணவர்கள் உயர்கல்வியில் சேர இணையத்தில் இருந்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து உபயோகித்துக் கொள்ளலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.


இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பின் சான்றிதழை இன்று முதல் அவரவர் படித்த பள்ளிகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிற தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:-

மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு (.1 Arrear) / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் 31,072023 அன்று முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், வழங்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) / மதிப்பெண் பட்டியலினை (Statement Of Mark) பெற்றுக்கொள்ளலாம்.

புதிய நடைமுறையில் (மொத்தம் 600 மதிப்பெண்கள்) தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல் வழங்கும் முறை

மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் (Mark Certificates) தனித்தனியே வழங்கப்படும்.

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ / இரண்டாம் ஆண்டுபொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக (Statement Of Mark) வழங்கப்படும். இம்மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு மேற்காண் இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

பழைய நடைமுறையில் (மொத்தம் 1200 மதிப்பெண்கள்) 2 தேர்வெழுதியவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறை

பழைய நடைமுறையில் (1200 மதிப்பெண்கள்) நிரந்தர பதிவெண் (Permanent Register Number) கொண்டு தேர்வெழுதிய மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வர்கள், இதற்கு முந்தைய பருவங்களில் தேர்ச்சி பெறாத பாடங்களை, மார்ச் ஏப்ரல் 2023 பொதுத் தேர்வில் எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பின், அவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ்களும், முழுமையாக தேர்ச்சி பெறாதவர்களுக்கு அவர்கள் தேர்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் (மார்ச் 2016 பொதுத் தேர்விற்கு முன்னர்) மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுதிய தேர்வர்கள், தற்போது மார்ச்/ஏப்ரல் 2023 பொதுத் தேர்வெழுதி இருப்பின், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.