ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அனுமதி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு





அட்மின் மீடியா

0

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்  அனுமது அளித்துள்ளது.

 ஞானவாபி மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதி அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மசூதியில் அகழாய்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்பின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. 

ஆனால்  ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்றும் அது செயற்கை நீரூற்று அமைப்பு இவர்கள் சிவலிங்கம்னு சொல்றது, தொழுகைக்கு பள்ளிவாசல் செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான் அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு இருக்கும் என மசூதி தரப்பில் கூறப்பட்டது கூறினார்கள்,மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது  

மேலும் வாரணாசி மாவட்ட நீதிமன்றமே இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதான் என தீர்ப்பு வழங்கியது. 

இந்நிலையில் மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய, ‘கார்பன் டேட்டிங்’ சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும்,’ என இந்து அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி இஸ்லாமிய அமைப்புகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

இந்த உத்தரவிற்க்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல செய்ய அறிவுறுத்தியது அதன்படி, இஸ்லாமிய அமைப்பு மனு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மசூதியில் அகழாய்வு நடத்தக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்புகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.